3 முறை கரு தாங்காத சோகம்.. நான்காவது பிரசவத்தில் 4 குழந்தைகள்.. வியப்பூட்டும் நெகிழ்ச்சி தகவல்..!!
China Hubei girl delivery 4 child in single delivery
சீன நாட்டினை சார்ந்த பெண்மணி, ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதில், இரண்டு பெண் குழந்தைகள் இரட்டையர்களாகவும், இரண்டு ஆண் குழந்தைகள் இரட்டையர்களாகவும் இருந்துள்ளனர். மொத்தமாக இரண்டு ஜோடி இரட்டையர்களை பெண்மணி பிரசவித்துள்ளார்.
சீனாவில் உள்ள ஹூபே மாகாணத்தின் மருத்துவமனையில் 32 ஆவது வாரத்தில் இக்குழந்தைகள் சுகப்பிரசவம் மூலமாகவே பிறந்துள்ளது. இந்த விஷயம் குறித்து பெண்ணின் கணவர் தெரிவிக்கையில், " எனது மனைவிக்கு மூன்று முறை கருத்தரித்து, கர்ப்பம் கலைந்தது.
இப்போது கடவுளின் ஆசீர்வாதம் காரணமாக குழந்தை பிறந்துள்ளது " என்று தெரிவித்தார். மேலும், ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று இரவு 9.28 க்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகளும், ஒரு நிமிட இடைவெளியில் மற்றொரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்ததாகவும் தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
China Hubei girl delivery 4 child in single delivery