ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு 4 பேர் படுகாயம்.!
Bomb blast in Afghanistan cricket ground
ஆப்கானிஸ்தானில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ஷ்பஜீசா கிரிக்கெட் லீக் எனும் உள்ளூர் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்றது. அப்போது, பேண்ட்-இ-அமிர் டிராகன்ஸ் மற்றும் பாமிர் சல்மி எனும் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், திடீரென தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. அப்போது திடீரென மைதானத்தில் குண்டு வெடித்தது உலக நாடுகளில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போட்டியின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் மைதானத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Bomb blast in Afghanistan cricket ground