போர் மேகங்கள் சூழும் வேளையில் ஈரானில் பயங்கரம்: முக்கியத் துறைமுகத்தில் வெடிவிபத்து ! - 20 பேர் படுகாயம்!
Amidst gathering war clouds terror Iran Explosion major port 20 people seriously injured
ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்துள்ள நிலையில், போராட்டக்காரர்களுக்குத் தனது பகிரங்க ஆதரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இப்பிராந்தியத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க, அமெரிக்கா தனது அதிநவீன போர்க்கப்பல்கள் அடங்கிய கடற்படையை ஈரான் எல்லை நோக்கித் திருப்பியுள்ளது.
இதன் விளைவாக, ஈரானின் கடலோரப் பகுதிகள் மற்றும் முக்கியத் துறைமுகங்களில் பாதுகாப்பு வளையம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இத்தகைய பதற்றமான சூழலில், ஈரானின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பந்தர் அபாஸ் துறைமுகத்தில் அந்நாட்டிற்குச் சொந்தமான போர்க்கப்பல்கள் அணிவகுத்து நின்றன. அப்போது, எதிர்பாராத விதமாக அங்கு வைக்கப்பட்டிருந்த எரிவாயு உருளைகள் (Gas Cylinders) பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறின.
இந்த கோர விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, அவசர சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து திட்டமிட்ட சதியா அல்லது கவனக்குறைவா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
Amidst gathering war clouds terror Iran Explosion major port 20 people seriously injured