பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!
America Warn Pakistan 26 December 2020
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற தனியார் நிறுவன பத்திரிக்கையாளர் டேனியல் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பயங்கரவாதியான உமர் சயீத் என்பவன் கைது செய்யப்பட்டான். இந்நிலையில், இவனை விடுதலை செய்யக் கூடாது என்று பாகிஸ்தானை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
கடந்த 2002 ஆம் வருடத்தில் நடைபெற்ற Wall Street Journal பத்திரிகையாளர் டேனியல் பியர்ஸ் கொலை தொடர்பான வழக்கில் உமர் சயீத் செய்து கைது செய்யப்பட்டான். இந்த வழக்கு கடந்த 18 வருடங்களாக சிந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், உமரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இந்த விஷயம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பில், உமர் சயீத்தை விடுவிக்கும்படி நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது குறித்த செய்திகள் கவலையை ஏற்படுத்துகிறது. இந்த விவகாரத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
America Warn Pakistan 26 December 2020