கிண்டலடித்த மாணவர்கள்: பொறுமையை இழந்ததால் பறிபோன உயிர்.! அமெரிக்காவில் பரபரப்பு!
America students shooting student dies
அமெரிக்கா, லோவாவில் உள்ள பள்ளியில் 17 வயது மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு மாணவர் உயிரிழந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
லோவாவில் உள்ள பெர்ரி மேல்நிலைப் பள்ளியில் டைலர் பட்லர் என்ற மாணவர் கைதுப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய டைலர் தன்னைத்தானே சூட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தாக்குதல் நடத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு டைலர், கழிவறையில் இருந்தபடி காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் 'உன் கெட்ட கனவு நிஜமாக போகிறது. உனது மோசமான எதிரி நான்தான்' என்பது போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பள்ளி மாணவ-மாணவிகள், டைலர் மிகவும் அமைதியான மாணவர் எனவும் அவரையும் அவரது சகோதரியையும் சக மாணவர்கள் அதிகமாக கிண்டல் செய்வதால் பொறுமையை இழந்து இந்த குற்றத்தை செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
English Summary
America students shooting student dies