என்னை விட்டு பிரிந்து செல்கிறாயா?.. காதலனின் வெறிச்செயல்.. குடும்பத்தினர் முன் அரங்கேறிய பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


தன்னைப் பிரிந்து சென்ற காதலியை காதலன் சுட்டுக்கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே இருக்கும் பகோய்மா பகுதியை சேர்ந்த பெண்மணி ரூபிஸ். இவர் தனது வீட்டிற்கு நேற்று திரும்பிக் கொண்டிருந்த நிலையில், அவரது வீட்டின் அருகே அவரது முன்னாள் காதலன் ஒருவன் வருகை தந்துள்ளார். 

இதனை கண்ட அவர் உடனடியாக வீட்டிற்குச் சென்று ஒளிந்து கொள்ள முயற்சிக்கவே, விரட்டி வந்த காதலன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டுக் கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். 

குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் துப்பாக்கிச்சூடு வாங்கி படுகாயமடைந்து உயிருக்கு போராடிய பெண்மணியை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை செய்து முன்னாள் காதலனை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Los Angels woman Murder by Ex Lover


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->