பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம..! ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு...! - Seithipunal
Seithipunal


பிலிப்பைன்ஸில் 6.2 ரிக்டர் அளவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காலை 10:00 மணியளவில் 124 கிலோமீட்டர் (77 மைல்) ஆழத்தில் தலைநகர் மணிலாவில் இருந்து தென்மேற்கே 140 கி.மீ. தொலைவில் உள்ள ஹூகேவில் ஏற்பட்டுள்ளது.

மேலும் கலடகன் நகருக்கு தென்மேற்கே 4 கிமீ தொலைவில் 103 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை நீடித்ததாக கலடகன் பேரிடர் அதிகாரி ரொனால்ட் டோரஸ் தெரிவித்தார். மேலும் தலைநகர் மணிலாவிலும், அருகிலுள்ள மாகாணங்களிலும் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்களிலிருந்து மக்கள் வெளியேறினர்.

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் பிலிப்பைன்ஸ் நாடு, பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்திருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 point 2 magnitude earthquake hits Phillipines


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->