ஆப்கானிஸ்தானில் மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழப்பு.!
4 died in bomb blast near a mosque in Afghanistan
ஆப்கானிஸ்தானில் மசூதி அருகில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மசூதி அருகே நேற்று நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு மசூதியில் தொழுகை முடிந்து வெளியே வருபவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த குண்டு வெடிப்பில் 4 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் உள்ளிட்ட சில பயங்கரவாத குழுக்கள் அடிக்கடி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
4 died in bomb blast near a mosque in Afghanistan