திடீரென பெய்த பேய் மழை.. 12 பேர் உடல் நசுங்கி பலி.. 18 பேர் மாயம்..!!
18 members died for heavy rain
தென்னமெரிக்க நாட்டில் உள்ள பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தென்னமெரிக்க நாட்டில் உள்ள பிரேசிலில் உள்ள மினாஸ் ஜெரியாஸ் மாநிலத்தில் இருக்கும் இப்பிரிட் நகரில் கடுமையான மழை பெய்துள்ளது. மேலும், அங்குள்ள பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான இல்லங்களில் வெள்ளம் புகுந்துள்ளதால், சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 17 பேர் மாயமாகியுள்ளனர்.
மேலும், 12 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும், வரும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
English Summary
18 members died for heavy rain