தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழையின் தீவிரம் குறையும் - இந்திய வானிலை ஆய்வு மையம் - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழையின் தீவிரம் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்பொழுது காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வளிமண்டல சுழற்சியாக வலுவிழந்து அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழையின் தீவிரம் குறையும். இதனால் தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மழையின் தீவிரம் குறைந்து, ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும்,தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 16-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The intensity of rain will decrease in Tamil Nadu for the next 2 days


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->