#BREAKING || வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.!
The depression formed in the Bay of Bengal has strengthened
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகியது. இந்நிலையில், தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இது இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை 10ஆம் தேதி புயலாகவும் வலுப்பெறும் என்றும், பின்பு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து 12ம் தேதி காலை வங்கதேசம் - மியான்மர் கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவிதுள்ளது.
இந்நிலையில், இன்று தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 12ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
The depression formed in the Bay of Bengal has strengthened