சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. தமிழ்நாடு வெதர்மேன் புதிய தகவல்! - Seithipunal
Seithipunal


மிகவும் வித்தியாசமான வடகிழக்கு பருவமழை தற்போது தொடர்ந்து பெய்து வருகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார் . இதனால் தற்போது  தமிழகத்தில் நல்ல மழை காலம் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

சென்னையில் மட்டும் தனியாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் மழையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த வாரம் தொடங்கிய மழை இன்னும் விடவில்லை. இன்னும் மூன்று நாட்களுக்கு சென்னையில் மழை பெய்யும் என்று கணித்துள்ளார். 

வடகிழக்கு பருவமழை கடைசி கட்டத்தில் மிகவும் தீவிரமாக பெய்து வருகிறது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் டிசம்பர் 7 மற்றும் 8ம் தேதிகளில் மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் ஒரு நாளுக்கு முன்பாகவே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் தினமும் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu weatherman says rain in chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->