சில மாவட்டங்களுக்கு மழை, பல பகுதிகளில் பனி வெயில் கலவை...! - வானிலை மையம் எச்சரிக்கை
Rain some districts mix fog and sunshine many areas Weather center warning
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்கு பகுதியில் சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை,திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிபேட்டை மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும் சூழல் உருவாகலாம்.
நாளை தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும். காரைக்காலிலும் இதே நிலை காணப்படலாம். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.
இந்த பனிமூட்டம் நிலை மேற்கண்ட மாவட்டங்களில் தொடர்ந்து நீடிக்கும்.5-ந்தேதியும் தென் மற்றும் டெல்டா பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை சாத்தியம் உள்ளது. இதர பகுதிகளில் மழை எதிர்பார்ப்பு இல்லை. 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழகமெங்கும், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை ஆதிக்கம் செலுத்தும்.
வெப்பநிலை நிலவரப்படி, இன்று முதல் 5-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவிலேயே இருக்கும். 6 மற்றும் 7-ந்தேதிகளில் உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை 1–2° செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 30–31° செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சம் 21–22° செல்சியஸ் வரை இருக்கும். நாளையும் இதே போன்ற வானிலை நிலை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது
English Summary
Rain some districts mix fog and sunshine many areas Weather center warning