#BREAKING : செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில்., அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை.!
rain alert in sevan district july 17
அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு, தமிழகத்தின் கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில், மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இராமநாதபுரம், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில், அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு (நாள் 17.07.2021 நேரம் மலை 4.30) மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் பரவலாக மழை பெய்யும் என்று தெரிவித்து இருந்தது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இராமநாதபுரம், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில், அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு (நாள் 17.07.2021 நேரம் மலை 4.30) மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
English Summary
rain alert in sevan district july 17