அடுத்த 48 மணிநேரத்திற்கு 6 மாவட்டங்களுக்கு கனமழை! வானிலை மையம் தகவல்!
nxt 48 hours rain for 6 district in tamilnadu
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழகம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளது இதன் காரணமாக ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும். கோவை,நீலகிரி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாக வாய்ப்பு.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் தன சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது, அதேபோல ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மூன்று சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
English Summary
nxt 48 hours rain for 6 district in tamilnadu