தமிழகத்தையும், மக்களையும் குளிர்விக்க வரும் மழை.. மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட சென்னை வானிலை மையம்.!
mar 06 weather report
தமிழகத்தில் கோடை காலத்தில் இருப்பதுபோலவே கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலை அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென் கிழக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழகம் வரை மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனி, ஞாயிறு கிழமை ஆகிய நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது, சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.