தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை, இந்த மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு.!
heavy rain in cuddalore district
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, குமராட்சி, கீழக்கரை, கொல்லங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
English Summary
heavy rain in cuddalore district