வறண்ட வானிலை தொடரும் தமிழகம்! - கடலுக்குச் செல்ல மீனவர்களுக்கு தடை! - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 30-ம் தேதி வரை மழையற்ற வறண்ட வானிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, 31-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளான தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும்.

3-ம் தேதியும் இதேபோல் மழையில்லா சூழ்நிலை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரில் அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாகக்கூடும்.

மேலும்,மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கையாக, இன்று முதல் 30-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி தன்மையுடன் கூடிய பலத்த காற்று வீசக்கூடும்.

காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டராகவும், சில நேரங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்தையும் எட்டக்கூடும் என்பதால், மீனவர்கள் இக்காலகட்டத்தில் கடலுக்கு செல்ல வேண்டாம் என கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dry weather continues Tamil Nadu Fishermen prohibited from going sea


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->