வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.! இந்திய வானிலை மையம்...! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்பொழுது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு மேற்கு பகுதியில் வடக்கு பஞ்சாபை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒடிசாவின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் தேன்கனல், அங்குல், பாலசோர், கட்டாக், கோர்தா, ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, சம்பல்பூர், ஜார்சுகுடா, பர்கார், சோனேபூர், நுவாபாடா மற்றும் போலங்கிர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A low pressure area has formed in the Bay of Bengal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->