வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி எப்-10.!!
isro launches gslv f10
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில், பூமியை கண்காணிப்பதற்காக 2268 எடை கொண்ட ஈ ஓ எஸ்-3 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது. இந்த செயற்கைகோள் ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு இன்று அதிகாலை ஆந்திராவில் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2வது ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த ராக்கெட்டில் முதல் முறையாக வெப்பத்திலிருந்து அதிக எடை கொண்ட செயற்கை கோள் மற்றும் அதிலுள்ள மின்னணு பொருட்களை பாதுகாப்பதற்காக ராக்கெட்டின் கூம்பு வடிவிலான முகப்பு பகுதியில் தனியாக வெப்பத்தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளது.
இதனால் திட்டமிட்ட இலக்கியம் செயற்கைகோளை நிலை நிறுத்தும் வரை செயற்கைக்கோளை இந்தத் வெப்பத்தகடுகள் பாதுகாத்துக் கொள்கிறது. செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட போது காரோண அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.