ரூ.17 லட்சம்., கால் பாய்., ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சம்பவம்.! பேராண்டிகளா உஷாரா இருங்க.! - Seithipunal
Seithipunal


விபச்சார கால் பாய் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞர் ஒருவரிடம் ரூ 17 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் சேர்ந்த அந்த படித்த பட்டதாரி இளைஞர், கால் பாய் தேவை என்ற ஒரு விளம்பரத்தை நம்பி, அதில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து இருக்கிறார்.

மறுமுனையில் பேசிய நபர்கள், தங்கள் நிறுவனத்தில் நீங்கள் பணிபுரிந்தால் ஒரு மணி நேரத்திற்கு 3 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றும் வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி அவரை மயக்கி உள்ளனர்.

இதில் மயங்கி அந்த இளைஞர் மறுமுனையில் பேசிய நபரிடம் மேலும் விவரங்களை கேட்டுள்ளார். அப்போது, இந்த பணியில் சேர்வதற்கு சில லட்சங்களை நீங்கள் முன்பணமாக தரவேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஏற்கனவே மயங்கி இருந்த அந்த இளைஞருக்கு சில லட்சங்கள் தானே என்று தனது தந்தையின் வங்கி சேமிப்பில் இருந்த 17 லட்சம் ரூபாயை அந்த மர்ம நபர்கள் இடம் கொடுத்துள்ளார்.

ரூ.17 லட்சத்தை வாங்கிய அந்த நபர்கள் மர்ம நபர்கள், அவரிடம் இருந்த அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் உள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் எந்த வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தினர் என்பது உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

call boy case police investigate


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->