கோவையில் பரிதாபம் : கிரிக்கெட் விளையாடிய போது மயங்கி விழுந்த வாலிபர் - சடலமாக மீட்பு.!
youth died at playground in coimbatore
கோவையில் பரிதாபம் : கிரிக்கெட் விளையாடிய போது மயங்கி விழுந்த வாலிபர் - சடலமாக மீட்பு.!
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவர் நேற்று தென்னம்பாளையம் அருகில் தனது கிரிக்கெட் குழுவுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருந்தார். அப்போது, வெள்ளியங்கிரி திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சிய அடைந்த அவரது நண்பர்கள், உடனடியாக வெள்ளியங்கிரியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வெள்ளியங்கிரி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்ட சக நண்பர்கள் தங்களது நண்பரின் இழப்பை தாங்க முடியாமல் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிரிக்கெட் விளையாடிய வீரர் மைதானத்திலேயே உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth died at playground in coimbatore