மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப பலி.. தேனி அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இளைய மகன் லட்சுமணன் அப்பகுதியில் உள்ள கோழி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

 இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல கடைக்கு வந்த லட்சுமணன் கோழியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள எயந்திரத்தை போடும் போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth death nera theni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->