திண்டுக்கல்: இளைஞர் திடீர் தற்கொலை.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் இளைஞர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் சிக்கம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் விக்னேஷ்குமார் (19). இவர் கேரளாவில் பெற்றோருடன் கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் விக்னேஷ்குமார் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிவதற்காக வேடசந்தூர் அருகே புளியம்பட்டியில் உள்ள மாமா வீட்டிற்கு வந்துள்ளார்.

இதையடுத்து விக்னேஷ் குமார் திடீரென அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விக்னேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விக்னேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth commits suicide by hanging himself in Dindigul


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->