கொரோனா ஊரடங்கால் பறிபோன வேலை... விரக்தியில் இளைஞர் எடுத்த சோக முடிவு..!
Youth commit suicide Near Chennai
வேலை கிடைக்காததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (28). இவர் அம்பத்தூரில் உள்ள தனியர நிறுவனம் ஒன்றில் வேலை செய்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் வேலை இழந்தார்.
கடந்த 9 மாதங்களாக அவர் வேலை இல்லாமல வீட்டில் இருந்து வந்தார். பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காததால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது விஷமருந்தியுள்ளார்.
மயங்கி கிடந்த அவரை மீட்ட அக்கம்பக்கதினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Youth commit suicide Near Chennai