கோவை : இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது.!! - Seithipunal
Seithipunal


கோவை : இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது.!!

கோயம்புத்தூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் துடியலூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு தன்னை ஆபாசமாக மார்பிங் செய்து வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல், தனது தந்தையின் ட்விட்டர் பக்கத்திலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். 

இந்த புகாரின் படி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அதன் பின்னர் இந்த குற்றத்தை செய்ததாக கோயம்புத்தூர்  காந்தி பார்க் பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார் என்ற வாலிபர் இன்று கைது செய்யப்பட்டார். 

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய செல்போன், சிம் கார்டு மற்றும் பென்டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth arrested for obscene photos published social media in covai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->