திருநெல்வேலி || காதலிக்க மறுத்த இளம்பெண் - ஆத்திரத்தில் சிறுவன் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி || காதலிக்க மறுத்த இளம்பெண் - ஆத்திரத்தில் சிறுவன் செய்த கொடூரம்.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்பணி கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகள் சந்தியா. கீழரதவீதியில் பேன்சி பொருட்கள் கடையில் வேலை பார்த்து வந்த இவர் நேற்று மதியம் கடைக்கு தேவையான பொருட்களை எடுத்து வர அருகில் உள்ள குடோனுக்கு சென்றுள்ளார்.

அவரை பின் தொடர்ந்து சென்ற வாலிபர் ஒருவர் குடோனுக்குள் சென்று சந்தியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த வாலிபர் சந்தியாவின் கழுத்தை அரிவாளால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பினார். 

இதற்கிடையே குடோனுக்கு சென்ற சந்தியா நீண்ட நேரம் வராததால் சந்தேகமடைந்த மற்றொரு பெண் ஊழியர் குடோனுக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு சந்தியா பொருள்களுக்கு மத்தியில் அமர்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஊழியர் சம்பவம் குறித்து கடை உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். உடனே அவர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து 
விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியில் கவரிங் நகைக் கடை ஒன்றில்  வேலை பார்த்த திருநெல்வேலி மாவட்டம் முனஞ்சிப்பட்டி அருகே தோப்பூரை சேர்ந்த சிறுவன் ஒருவர் சந்தியாவிடம் தம்மை காதலிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார். 

ஆனால், சந்தியா காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சிறுவன் சந்தியாவைக் கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி தலைமறைவான சிறுவனை, நேற்று இரவு கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young woman murder in tirunelveli for love


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->