தாய் கண்டித்ததால் மனவேதனை அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Young person commits suicide by drinking poison in Thirupattur
தாய் கண்டித்ததால் மனவேதனை அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் குடியானகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (29). இவர் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலை செய்துவிட்டு ஊருக்கு வந்துள்ளார்.
அதன் பின்பு வேலைக்கு செல்லாமல் சிறிது நாட்களாக ஊரிலேயே சுற்றி திரிந்துள்ளார். இதனை தாயார் கண்டித்துள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த ஜெயப்பிரகாஷ் வாழ்க்கையில் வெறுப்படைந்து, தற்கொலை செய்து கொள்வதற்காக மதுவில் விஷம் கலந்து குடித்து சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையம் அருகில் மயங்கி கிடந்துள்ளார்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் ஜெயப்பிரகாஷை மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு ஜெயப்பிரகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஜெயாபிரகாஷின் சகோதரர் சந்தோஷ் கொடுத்து புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Young person commits suicide by drinking poison in Thirupattur