"தலைக்கேறிய போதை".. கழுத்தை அறுத்துக் கொண்ட வாலிபர்...சேலத்தில் பரிதாபம்..! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் மது போதையில் தனக்குத்தானே கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை தென்கரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (32). இவர் குடும்பத்தினருடன் சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், சம்பவத்தன்று ஏற்காடு அடிவாரத்தில் மதுபோதையில் தனக்குத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man who cut his own throat while under the influence of alcohol in salem


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->