திருப்பூர்: அமராவதி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜ். இவரது மகன் மணிகண்டன் (24). இவர் கோவையில் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் மணிகண்டன் தனது நண்பர்களுடன் வேனில் ஒட்டன்சத்திரம் அப்பியம்பாளையம் சென்று விட்டு தாளவாடிக்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது தாராபுரம் அருகே வந்தபோது அங்குள்ள அமராவதி ஆற்றுப் பாலத்தில் வேனை நிறுத்திவிட்டு, மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர்.

இதில் மணிகண்டன் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young man drowned while bathing in Amaravati river


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->