தூத்துக்குடி : மது குடிப்பதை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் மது அருந்துவதை கண்டித்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா. இவரது மகன் பிரபு(36). இவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெருமாள் நகரில் உள்ள தனது சகோதரர் ராஜேஷ் என்பவரது வீட்டில் தங்கி டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் பிரபுக்கு மதுப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த பிரபு வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று முன்தினம் தனது சகோதரர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பிரபுவின் தந்தை ராஜப்பா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man commits suicide in Thoothukudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->