ஆன்லைன் மூலம் ரம்மி.. பணம் இழந்ததால் மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை..!
Young man commits suicide after losing money in rummy online
ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்ததால் மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் கீரம்பூர் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ் இவருக்கு திருமணமாகி சங்கீதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். அந்த பகுதிகள் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் ராஜுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது கடந்த சில நாட்களாக ஆன்லைன் மூலம் ரம்மி விளையாட கணிசமான பலத்தை இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் மன உளைச்சலுக்கு உள்ளான விஜயராஜ் கடந்த சில தினங்களாக தனது சித்தப்பா வீட்டில் வசித்து வருகிறார். நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டு பணம் இழப்பதால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதால் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
Young man commits suicide after losing money in rummy online