16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வாலிபர்.. போக்சோவில் கைது.!
Young Man arrested for forcing 16 year old girl into marriage in Ariyalur
அரியலூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவேளி பகுதியை சேர்ந்தவர் காமராஜர். இவரது மகன் வசந்தன் (22) அதே பகுதியை சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 16 வயதுடைய 11ஆம் வகுப்பு மாணவியுடன் பழகியுள்ளார்.
இதையடுத்து வசந்தன் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கட்டாயப்படுத்தி மிரட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த வசந்தனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த வசந்த் அனில் தாயார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலீசார் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து, கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Young Man arrested for forcing 16 year old girl into marriage in Ariyalur