கன்னியாகுமரி: தனியார் கல்லூரி வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் கல்லூரி வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தச்சூர் அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ஜான் ஸ்டீபன் அருள்ராஜ் (48). இவர் நேற்று மாலை மார்த்தாண்டத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் குலசேகரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது ஆற்றூர் கல்லுபாலம் பகுதியில் சென்ற போது, எதிரே வந்த தனியார் கல்லூரி வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜான்ஸ்டீபன் அருள்ராஜ், பலத்த காயம்டைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திருவட்டார் காவல்துறையினர் உயிரிழந்த ஜான்ஸ்டீபன் அருள் ராஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த விபத்து குறித்து ஜான் ஸ்டீபன் அருள்ராஜின் உறவினர் லெனின் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கல்லூரி வாகனம் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker killed in college bus collision in kanniyakumari


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->