மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள உக்கல் கிராமம் குட்டை கரை பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சங்கர்(45). இவருடைய மனைவி கௌரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் சங்கர் நேற்று மாலை வீட்டின் முன்பு அருந்து கீழே கிடந்த ஒயரை எடுத்துள்ளார். அப்பொழுது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சங்கரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சங்கரின் மனைவி கௌரி கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker killed electrocuted in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->