கோவை || மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திள்ளது.

கோவை மாவட்டம் பன்னிமடை தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் (52). இவர் கணுவாய் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் ரங்கநாதன் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஏணி ஒற்றை எடுத்து மாற்றி வைத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக மின் வயர் மீது பட்டதால், அதிலிருந்து மின்சாரம் தாக்கி ரங்கநாதன் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் ரங்கநாதன் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ரங்கநாதன் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த ரங்கநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker killed electrocuted in kovai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->