காஞ்சிபுரம் || அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வசந்தகுமார் (34). இவர் நேற்று காலை அருகில் உள்ள காலி மைதானத்தின் வழியாக நடந்து செல்லும் போது, அருந்து கீழே விழுந்து கடந்த உயர் அழுத்த மின் கம்பியை தெரியாமல் மிதித்துள்ளார்.

இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வசந்தகுமார் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வசந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker killed electrocuted in kanchipuram


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->