கள்ளக்குறிச்சி: நிலைதடுமாறிய பைக்.! கீழே விழுந்த தொழிலாளி பலி.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பைக்கில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வரதப்புனூர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி கொளஞ்சி (41). இவர் இருசக்கர வாகனத்தில் பாபு என்பவருடன் பெரிய சிறுவத்தூர் கிராமத்திற்கு சொந்த வேலை காரணமாக சென்றுள்ளார். பின்பு அங்கிருந்து வரதப்புனூர் பகுதி நோக்கி வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறிய இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் கொளஞ்சி தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கொளஞ்சி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து கொளஞ்சியின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker dies after fell from tha bike in kallakurichi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->