திருமணம் பிடிக்காததால் மணப்பெண் செய்த காரியம்..! அரங்கேறிய விபரீதம்..! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேட்டில் திருமணம் பிடிக்காததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் பிடிக்காத காரணத்தால் இளம்பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோயம்பேடு சின்மயா நகர் குலசேகரபுரம் வேதா சாலையில் சேர்பவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் பிரியங்கா. இவருக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிவு செய்துள்ளார். வருகிற 9-ந்தேதி நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த பிரியங்கா நேற்று மாலை பெற்றோரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

அதன் பிறகு இரவு படுக்கை அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்ட அவர், நீண்ட நேரமாக வெளிய வராததால் சந்தேகமடைந்த ராமகிருஷ்ணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது பிரியங்கா மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார் பிரியங்கா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women suicide for she don't like marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->