கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய பெண்! வீட்டில் கொடூர நிலையில் கிடந்த பரிதாபம்!!  - Seithipunal
Seithipunal


துரை மாவட்டத்தில் உள்ள கருப்பாயூரணி பகுதியை சார்ந்தவர் மணி. இவரது மனைவி பெரிய கார்த்தி (வயது 40) ஆவார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஏற்பட்ட குடும்ப பிரச்சனையின் காரணமாக பெரிய கார்த்தி வீட்டினை விட்டு வெளியேறியுள்ளார். இதன் பின்னர் அழகர்கோவில் பகுதியில் உள்ள கருப்பசாமி என்பவருடன் குடும்பம் நடத்தி வந்ததாக தெரியவருகிறது.

பெரியகார்த்தி கருப்பசாமியுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், நேற்று வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக இருந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கார்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

தனது மகளின் இறப்பை அறிந்த பெரிய கார்த்தியின் தாயார் அங்குள்ள காவல் நிலையத்தில், மகளின் இறப்பில் மர்ம உள்ளதாக புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women death in lover house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->