வீட்டிலிருந்து திடீரென வெளிவந்த புகை.! அதிர்ச்சியடைந்து கதவை திறந்தவர்களுக்கு கருகிய நிலையில் காத்திருந்த பேரதிர்ச்சி!! - Seithipunal
Seithipunal


சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் முத்தமிழ்நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஸ்ரீராம். இவரது மனைவி அருணா. இவர்களுக்கு ராதிகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில்  கடந்த 18-ந்தேதி ஸ்ரீ ராம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். மேலும்இதனால் குடும்பமே பெரும் சோகத்தில் இருந்த நிலையில் கடந்த 21-ந் தேதி இவர்களுடைய மகள் ராதிகாவும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
 
இந்நிலையில் கணவர் மற்றும் மகள் இருவரையும் பறிகொடுத்த பறிகொடுத்த அருணா, மிகவும் மனம்உடைந்து போனார். மேலும் எந்நேரமும் இருவரையும் நினைத்து அழுதுகொண்டே இருந்துள்ளார். இவ்வாறு துக்கம் தாளாமல் தனி ஆளாக தவித்து வந்த அருணாவுக்கு உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என அனைவரும் ஆறுதல் கூறி வந்துள்ளனர்.


இந்தநிலையில் நேற்று திடீரென அருணாவின் வீட்டில் இருந்து பெருமளவில் புகை வெளியேறியுள்ளது. வீடு தீப்பிடித்து எரிவதாக நினைத்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து  தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துவிட்டு கதவை திறக்க முற்பட்டனர்.

பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் உள்ளே அருணா, உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். மேலும்  இதுகுறித்து தகவலறிந்தபோலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, அருணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஈடுகுறித்து போலீசார் கூறுகையில் தனது கணவர் மற்றும் மகள் இறந்த சோகம் தாங்காமல் அருணா, தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman suicide for not accepting the dead of husband and daughter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->