அரசு பேருந்தில் உடைந்த மரப்பலகை - பயணிகளின் நிலை என்ன?
woman passanger injured for govt bus wood broke in chennai
சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதையடுத்து இந்த பேருந்து என்.எஸ்.கே நகர் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் பின்பக்க இருக்கைக்கு கீழிருந்த மரப்பலகை உடைந்துள்ளது.
இதனால், இருக்கையில் இருந்த பெண் பயணி நிலை தடுமாறி பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டவுடன் பேருந்து ஓட்டுநர் வாகனத்தை உடனடியாக நிறுத்தியுள்ளார்.
பின்னர், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே விழுந்த நபரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீழே விழுந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
woman passanger injured for govt bus wood broke in chennai