பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக்கேட்க வேண்டும் - ராகுல் காந்தி!!
PM Narendra Modi should apologize Rahul Gandhi
மக்களவை தேர்தலுக்கான மூன்றாம்கட்ட வாக்குப்பதிவுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ளது. அனைத்துகட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களில் இரண்டுகட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், வரும் மே- 7 தேதி மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறயுள்ளது.
அந்தவகையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரித்த ராகுல் காந்தி பேசுகையில்,கர்நாடக மாநிலத்தில் 400 பெண்களை வன்கொடுமை செய்த ஹசன் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக பிரசாரம் செய்து வாக்குக் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
English Summary
PM Narendra Modi should apologize Rahul Gandhi