#தூத்துக்குடி || விளாத்திகுளம் அருகே பெண் வெட்டிக்கொலை.!!
Woman murdered near vilathikulam Thoothukudi
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண் பேருந்து நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.ஸசொத்து பிரச்சினை மற்றும் திருமணம் தாண்டிய உறவை கைவிடாததால் சொந்த அண்ணியை இளைஞர் வெட்டிக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்போதும் வென்றான் பகுதியை சேர்ந்த வைரமுத்து என்பவரது மனைவி சின்னமணி கணவர் இறந்து விட்டதால் புதுக்கோட்டையில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
வைரமுத்துவின் சகோதரர் ராஜேஷ் கண்ணன் - சின்னமணி இடையே சொத்து பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று எப்போதும் வென்றான் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த சின்னமணியை ராஜேஷ் கண்ணன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
English Summary
Woman murdered near vilathikulam Thoothukudi