இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் மேகலிங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி கோமதி (42). இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளம் பேருந்து நிலையம் அருகே வந்த போது, இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கணவன்-மனைவி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இருவரையும் அபப்குதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் கோமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் முருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நாங்குநேரி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman dies after falling from twowheeler in Tirunelveli


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->