குடிக்கு அடிமையான கணவன்..!! மன உளைச்சலால் மனைவி தற்கொலை..!! - Seithipunal
Seithipunal


கணவன் மதுவிற்கு அடிமையானதால் மனாய்வி தற்கொலை செய்து கொண்ட சம்பவாம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் பகுதியில் வசித்து வருபவர் குப்பன். இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவி உள்ளார். கூலி வேலை செய்து வரும் அவர் மதுவிற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

தினமும் மது அருந்துவதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மது அருந்துவதால் குப்பன் வேலைக்கு செல்லவில்லை. இதனால் சுதா கூலிவேலை செய்து கொண்டு வரும் சம்பளத்தையும் கேட்டு துன்புறுத்தியுள்ளார்.3

இந்நிலையில், சம்பவதன்று குப்பன் சுதா சேர்த்து வைத்த பணத்தையும் எடுத்து சென்று குடித்துள்ளார். இதனால், மனமுடைந்த சுதா தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளிவிதையை அரைத்து குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman Committed suicide due to family issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->