வறுமையில் வாடும் பெண்களை குறிவைத்து நடந்த அவலம்.. பெண் குண்டர் சட்டத்தில் கைது..!
Woman arrested In Madurai
பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்ணை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
மதுரை கோ.புதூர் மகாலட்சுமி நகரைச் சோந்த தேவராஜ். இவரின் மனைவி பிரசன்னா தேவி. இவர் அந்த பகுதியில் வறுமையில் இருக்கும் பெண்களை பயன்படுத்தி பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அடுத்து, காவல்துறையினர் சோதனை நடத்தி பிரசன்னா தேவியை கைது செய்தனர். மேலும் ,அவரிடம் சிக்கியிருந்த பெண்களையும் மீட்டனர். இதற்கிடையில் மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் பிரசன்னா தேவியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன் படி, அவரை குண்டர் சட்டத்திங் கீழ் கைது செய்தனர். அதற்கான ஆணையை மத்தியச் சிறையில் உள்ள பிரசன்னா தேவியிடம் காவல்துறை சார்பில் வழங்கப்பட்டது.
English Summary
Woman arrested In Madurai