காதலனுடன் குதூகலமாக இருந்த மனைவி.. ஆத்திரத்தில் கும்மியெடுத்த கணவன்..! அரங்கேறிய வெறி செயல்.!!
wife illegal relationship issue
சேலத்தில் உள்ள கெங்கவல்லி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநரான பிரகாஷ் என்பவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு பிரியா என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் வீட்டிற்கு சின்னதுரை என்பவர் வீட்டிற்கு பாலூற்றி வந்துள்ளார். இந்த நிலையில் பால்காரருக்கும், மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அதுவே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த பிரகாஷ் மனைவியை கண்டித்து பின் சின்னத்திரையிடம் பால் வாங்குவதை நிறுத்தி விட்டார்.
இதனால் மனைவி பிரியா அவரது கணவருக்கு தெரியாமல் பால்காரரை சந்திக்க ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காதலர் தினத்தன்று வெளியே சென்றிருந்த பிரகாஷ் வீட்டிற்கு வந்த நிலையில் வீட்டில் மனைவி இல்லாததை தெரிந்துகொண்டு, அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார்.
அப்போது, அவர் பால்காரன் வீட்டிற்கு சென்றது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து, பிரகாஷ் அரிவாளை எடுத்துக் கொண்டு கோபமாக சின்னத்துரை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மனைவியும், பால்காரனும் தனிமையில் இருந்ததை பார்த்த பிரகாஷ் அரிவாளை எடுத்து இரண்டு பேரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதை தொடர்ந்து, அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பிரகாஷிடமிருந்து இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதை தொடர்ந்து கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வரும் முன்னே பிரகாஷ் போலீசில் சரணடைந்துள்ளார். பின்னர் பிரகாஷை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
English Summary
wife illegal relationship issue