திருமண நாளை முன்னிட்டு நள்ளிரவில் குதூகலம்.! மனைவிக்கு பறிபோன உயிர்.!  - Seithipunal
Seithipunal


வேலூரைச் சேர்ந்த வேணி ஷைலா (27) என்பவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் நர்சாக இருக்கின்றார். இவருக்கு விக்னேஷ்(30) என்ற கணவரும் ஒன்றரை வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களுடைய திருமண நாளை கொண்டாட சென்னை வந்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் பாலவாக்கத்தில் இருக்கும் தங்களுடைய நண்பர் வீட்டில் தங்கி இருக்கின்றனர். திருமண நாளை கொண்டாடுவதற்காக கடற்கரைக்கு வியாழக்கிழமை இரவு சென்று இருக்கின்றனர். அங்கே கடற்கரையில் கேக்கை வெட்டி திருமண நாளை உற்சாகமாக கொண்டாடி இருக்கின்றனர்.

நள்ளிரவு 12 மணியளவில், இருவரும் கடலுக்குள் சென்று குளித்து இருக்கின்றனர். அப்பொழுது ஷைலா தான் வாங்கி இருந்த மோதிரத்தை சர்ப்ரைசாக விக்னேஷின் கைவிரலில் மாற்ற முயற்சித்தார். அப்போது பெரிய அலை ஒன்று வேகமாக வந்து இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இதில் விக்னேஷ் கடலில் இருந்து தப்பி வெளியில் வந்துவிட்டார். ஆனால், சைலா வெளியில் வர முடியாமல் தவித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் உடனடியாக நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த காவல்துறையினர். ஷைலாவை தேடினர். இதற்கிடையில் ஷைலாவின் பிணம் கொட்டிவாக்கம் கடற்கரை பகுதியில் சற்று நேரத்தில் கரை ஒதுங்கி இருக்கின்றது.

பின்னர் தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமண நாள் கொண்டாட்டத்தில் காதல் கணவன் முன்பே மனைவி இறந்து போனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife dead when celebrating wedding day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->