தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் முக கவசம் கட்டாயம்.. 500 ரூபாய் அபராதம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முககவசம் கட்டாயம் என்ற ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது .

அந்த வகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார். மதுரையில் பொதுஇடங்களில் முக கவசம் அணியாவிடில் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், அலுவலகம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் கொரோனா விதிகளை பின்பற்றவும் மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wear mask compulsory in madurai district


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->